ஏதோ நினைப்பில் சாலையில் சென்று கொண்டிருந்தேன்
நண்பர்களுடன்…
மக்கள் கூட்டம் அலை மோதிய அந்த சிறு சாலையில் என் இரு விழிகள் யாரோ அழைத்ததை உணர்ந்து சுற்றும் முற்றும் பார்க்க முடிவெடுத்து அந்த ஓசை வந்த திசையை நோக்கி படம் பிடிக்க முயன்றது..
யாரென்று பார்ப்பது…
இது வரை கண்டிராத முகம்…
என்னுள் ஏதோ பயம் வேறு…
என்ன செய்ய
திரும்பாமல் பார்க்காமல் சென்று விடலாமா…
போகவும் மனமில்லை…
ஒரு ஈர்ப்பு.. பார்த்தே ஆக வேண்டும் என்று…
பயத்தை சற்று ஓதுக்கி வைத்து விட்டு திரும்பினேன்… சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு பெண் போலீஸ் என்னை அழைக்கிறது….
மனம் அலற ஆரம்பித்தது…
ஏன் என்னை அழைக்க வேண்டும் என்று.???
நான் என்னென்னவோ நினைத்து இருந்தேன்.. அக்குரல் யாராக இருக்குமோ என்று ???
சிறு கனவு உலகத்திற்க்கும் சென்று வந்தேன் அந்த இடை பொழுதில்.. அனைத்தும் மேக கூட்டம் கலைந்தது போன்று கலைந்து போனது… நான் ஒன்றும் செய்ய வில்லையே.. ஏன் என்னை அழைத்தார்கள்.???
.. என்னை நெருங்கி வந்த அந்த பெண் போலீஸ் என் சட்டை காலரை பிடிப்பது போல் வந்தார்கள்..
பயம் என்னையும் மீறி கண்களில் கண்ணீரை வர வழைத்தது.. என்ன நடக்குமோ என துடித்த நெஞ்சம்
ஒரு கணம்… அமைதியாய்… நன்றி என கூறியது…
ஏன் ???
அந்த போலீஸ் சொன்ன வார்த்தைக்கு. !!!
சைடு ஸ்டாண்டு எடுத்து விட்டு போ பா !!!..
விழுந்து விட போற … பார்த்து போ !!!
என்று கனிவோடு கூறியதை கேட்டு !!!
என்னடா இவன் இவ்ளோ ரவுசு பண்ணானே !!!
ஏதா அழகான பொண்ணா பார்த்தனு சொல்லுவானு எதிர் பார்த்திருப்பீங்க… அது வேற… அது பொய்யா இருக்கும்.. இது தான் உண்மை… பொய் கொஞ்சம் கவர்ச்சியா தான் இருக்கும்.. ஆனா உண்மைக்கு அது இல்லை ..
இருந்தாலும் படித்ததற்கு மிக்க மிக்க நன்றி !!!