Posted by Durai Satish under
the feel Leave a Comment

என் புதுச்சேரி !!!
அகிலத்தின் ஒளி விளக்கு புதுச்சேரி !!!
வான் நிறமாய் கடற்கரையும்
எழில் கொஞ்சும் பூங்காவும்
ஒளி விளக்கின் எரி பொருளாம் !!!
சாலையோரம் நிழல் மரமும்
பூத்து குலுங்கும் வெண் மலரும்
ஒளி விளக்கின் சாயங்கலாம் !!!
சுற்றுலாவின் அடித்தலம் போல்
மாட்திரி மந்திரின் தனித்துவமாய்
மக்கள் மனதில் ஊற்றெடுக்கும்
புதுவை எனும் தேண்துளியாம் !!!
அமைதி என்ற சொல்லுக்கு
விளக்கம் தரும் அகராதி
அரவிந்தரின் ஆசிரமம் !!!
பழமை கொண்டு பெருமை பெறும்
புதுமை வாய்ந்த பதுமையாய்
மின்னி தவழும் இன்ப புதுவை !!!